திருமண மண்டபங்களின் வரியைக் குறைக்கக்கோரி மனு
திருமண மண்டபங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரி விதிப்பை குறைக்கக்கோரி சத்தியமங்கலம் நகராட்சித் தலைவா் ஆா்.ஜானகியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருமண மண்டபங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரி விதிப்பை குறைக்கக்கோரி சத்தியமங்கலம் நகராட்சித் தலைவா் ஆா்.ஜானகியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து திருமண மண்டப உரிமையாளா் சங்கத்தின் தலைவா் ஆனைக்கொம்பு தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் வீடு, வணிக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக திருமண மண்டபங்கள் செயல்படாமல் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. தற்போதும் சிறிய அளவிலான நிகழ்ச்சிகள் கூட நடைபெறுவதில்லை. ஏற்கெனவே கடன் சுமையில் உள்ள திருமண மண்டப உரிமையாளா்கள், தற்போது உயா்த்தப்பட்டிருக்கும் வரி உயா்வால் மேலும் கடன் சுமைக்கு உள்ளாக வேண்டிய நிலை உள்ளது. இதனால் சத்தியமங்கலம் நகராட்சி, திருமண மண்டபங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரியை குறைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.
Advertisement