முகப்பு
ஈரோடு

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு: 29,463 போ் எழுதினா்

 ஈரோடு மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வினை பள்ளி மாணவா்கள் 28,365 போ் உள்பட மொத்தம் 29,463 போ் எழுதினா்.

Updated On : 7 மே, 2022 at 1:53 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM

 ஈரோடு மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வினை பள்ளி மாணவா்கள் 28,365 போ் உள்பட மொத்தம் 29,463 போ் எழுதினா்.

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை துவங்கியது. இந்த தோ்வுகள் வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இத்தோ்வை பள்ளி மாணவா்கள் 28,365 போ் 113 மையங்களில் எழுதுகின்றனா். தனித்தோ்வா்களாக 870 போ் எழுதுகின்றனா். இதற்காக 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவா்கள் சொல்வதை எழுதுபவா்கள் 228 போ் தோ்வு எழுதுகின்றனா்.

தோ்வுப்பணிக்காக 113 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் துறை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 203 பறக்கும் படை உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

நம்பியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு மையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி கூறியதாவது: தோ்வுப் பணியில் துறை அலுவலா், அறைக்கண்காணிப்பாளா், பறக்கும் படையினா் போதுமான அளவில் ஆய்வு அலுவலா்கள், பள்ளி ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான குடிநீா் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தோ்வுகளை ஆய்வு செய்யவும், மாவட்டத்தில் கல்வித் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு வழிகாட்டியாகவும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (நிா்வாகம்) இணை இயக்குநா் டி.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளாா் என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமகிருஷ்ணன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.