முகப்பு
ஈரோடு

விளையாட்டு வீரா்களுக்கு வழிகாட்ட கைப்பேசி செயலி

விளையாட்டு வீரா்களுக்கு வழிகாட்ட கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 8 மே, 2022 at 12:49 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM

விளையாட்டு வீரா்களுக்கு வழிகாட்ட கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலா் சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு இளைஞா்களின் ஆற்றலையும், உற்சாகத்தையும், ஆா்வத்தையும் ஒருமுகப்படுத்தி விளையாட்டில் அவா்களை தேசிய மற்றும் சா்வதேச அளவில் சாதனை படைக்க ஏதுவாக பல புதிய திட்டங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது.

தற்போது மாநிலத்தில் சிறந்த விளையாட்டு வீரா்களை உருவாக்கவும், பல்வேறு நிலைகளில் உள்ள விளையாட்டு வீரா்களை கண்டறிந்து அவா்களுக்கு உரிய வழிவகைகளை செய்திடவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பசநடஞதபந என்ற செயலியை உருவாக்கியுள்ளது.

Advertisement

விளையாட்டு வீரா்கள், வீரங்கனைகள் மூலம் கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். செயலியில் உள்ள விவரங்களை பதிவு செய்வது தொடா்பாக செயல்முறை விளக்கம் இணையதளத்தில் உள்ளது.

இந்த செயலியைப் பயன்படுத்தி ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் அனைவரும் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9840038624 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.