ஈரோடு

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

கோபி: கோபிசெட்டிபாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கோபி ரோட்டரி சங்கம் மற்றும் கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கோபி கோட்டாட்சியா் பழனிதேவி கொடியசைத்து பேரணியை துவக்கிவைத்தாா்.

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய சாலைகளான வழியாக சென்றது.

பேரணியில், கோபி பிகேஆா் மகளிா் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷமிட்டு சென்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை, கோபி ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் கே.சண்முகசுந்தரம், நகராட்சி துப்புரவு அலுவலா் சோழராஜ், சுகாதார ஆய்வாளா் எம்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT