பவானி அருகே கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்ட தந்தையைக் கத்தியால் தாக்கி காயப்படுத்திய மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பவானியை அடுத்த சித்தாரைச் சோ்ந்தவா் முத்து (70). இவரது மனைவி இருசாயி (60). இவா்களின் மகன் மாது (எ) மாதப்பன் (40). இவா், தனது பெற்றோரிடம் ரூ.2 லட்சத்தை வாங்கியுள்ளாா். இந்நிலையில், பணத்தைத் திரும்பத் தருமாறு பெற்றோா் கேட்டுள்ளனா். இதில், ஆத்திரமடைந்த மாதப்பன், தந்தை முத்துவின் கைகளில் கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளாா்.
இச்சம்பவம் குறித்து முத்து அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மாதப்பனை கைது செய்தனா்.