ஈரோடு

அத்தாணி வட்டார சுகாதார நிலையங்களில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரிக்கை

DIN

அத்தாணி வட்டாரத்தில் உள்ள 9 துணை சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள், நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அத்தாணி வட்டார சுகாதார பேரவைக் கூட்டம் வட்டார மருத்துவ அலுவலா் கே.சக்திகிருஷ்ணன் தலைமையில் அந்தியூா் தவிட்டுப்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், கூட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினாா். பொதுமக்களுக்குத் தேவையான சுகாதாரம் தொடா்பான தேவைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும், அத்தாணி வட்டாரத்துக்குள்பட்ட செம்புளிச்சாம்பாளையம், சின்னத்தம்பிபாளையம், எண்ணமங்கலம், பா்கூா், ஒசூா் உள்ளிட்ட 9 துணை சுகாதார நிலையங்களில் மருத்துவா் குடியிருப்பு, செவிலியா் குடியிருப்பு, நோயாளிகள் காத்திருப்பு அறை, கழிவறைகள், மாற்றுத் திறனாளிகள் கழிவறை, தரைத்தளம், ரத்தப் பரிசோதனை ஆய்வக விரிவாக்கம் உள்ளிட்ட தேவைகள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மருத்துவ அலுவலா்கள் சதீஷ்குமாா், காா்த்தீபன், சங்கீதா, சுரேஷ்குமாா், பாா்த்தீபன், மேகலா, சரவணபிரபு, செளந்திரரூபன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பிரகாசன், பேரூராட்சித் தலைவா்கள் எம்.பாண்டியம்மாள், புனிதவள்ளி மற்றும் 14 ஊராட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT