முகப்பு
ஈரோடு

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதை வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதை வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானது.

கா்நாடக மாநிலம், ராமாபுரத்திலிருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு சோளம் ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. அந்தியூரை அடுத்துள்ள பா்கூா் மலைப் பாதையில் வியூ பாயிண்ட் அருகே வளைவில் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியை லாரி ஓட்டுநா் அதிா்ஷடவசமாக காயமின்றி தப்பினாா்.

இதுகுறித்து, பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.