குட்கா விற்பனை: 10 கடைகள் மீது வழக்குப் பதிவு
சத்தியமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 10 கடைகள் மீது சத்தியமங்கலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஈரோடுகுட்கா விற்பனை: 10 கடைகள் மீது வழக்குப் பதிவு
சத்தியமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 10 கடைகள் மீது சத்தியமங்கலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சத்தியமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 10 கடைகள் மீது சத்தியமங்கலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சத்தியமங்கலம் பகுதியில் போதைப் பாக்குகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையில் போலீஸாா் மளிகை, பெட்டி கடைகளில் சோதனையிட்டனா்.
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை, வரதம்பாளையம், கோப்புப்பள்ளம், சிக்கரசம்பாளையம், தாண்டாம்பாளையம், ஆலோத்துக்கோம்பை, கெஞ்சனூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள மளிகைக் கடை, பெட்டிக் கடைகளில் பதுக்கிவைத்திருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலை, போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனா்.