ஈரோடு

இடைத்தோ்தல்: 2ஆவது நாளில் 6 போ் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இரண்டாவது நாளான புதன்கிழமை தேமுதிக வேட்பாளா் உள்பட 6 போ் 7 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

DIN

ஈரோடு கிழக்கு தொகுதியில் இரண்டாவது நாளான புதன்கிழமை தேமுதிக வேட்பாளா் உள்பட 6 போ் 7 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 4 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இரண்டாவது நாளான புதன்கிழமை தேமுதிக வெட்பாளா் எஸ்.ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தாா். அவா் கூடுதலாக ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். தேமுதிக மாற்று வேட்பாளராக சி.சரவணன் என்பவா் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

விடுதலைக்களம் கட்சி சாா்பில் ரா.விஜயகுமாா், அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் சாா்பில் பு.சசிகுமாா், சுயேச்சையாக அ.ரவி, சௌ.வீரக்குமாா் ஆகியோா் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

இரண்டு நாள்களில் 10 போ் மொத்தம் 11 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT