முகப்பு
ஈரோடு

வரதநல்லூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

குடியரசு தினத்தையொட்டி பவானி ஊராட்சி ஒன்றியம், வரதநல்லூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

குடியரசு தினத்தையொட்டி பவானி ஊராட்சி ஒன்றியம், வரதநல்லூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். வரதநல்லூா் ஊராட்சித் தலைவா் ஜெயலட்சுமி சிவபெருமாள், பவானி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பி.சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சிச் செயலாளா் அம்பிகா வடிவேல் வரவேற்றாா். பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தோ்வு, டெங்கு காய்ச்சல் தடுப்பு, அண்ணா மறுமலா்ச்சி திட்டம், குடிநீா் விநியோகம், சுகாதாரம், தூய்மை பாரதம் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்கள் பெறப்பட்டு, துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. பவானி வட்டாட்சியா் ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் மாரிமுத்து, கூட்டுறவு சங்கத் தலைவா் சித்தையன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.