ஈரோடு

கொங்கு கல்லூரியில் மாணவா் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவா் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்கும் விழா கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவா் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்கும் விழா கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் தாளாளா் பி.டிதங்கவேல் தலைமை வகித்தாா். துறைத் தலைவா் எஸ்.முருகானந்தம் நிகழ்வைத் தொடங்கிவைத்து துறையின் 2023-2024ஆம் கல்வியாண்டுத் திட்டத்தை வெளியிட்டாா். முதல்வா் ஹெச்.வாசுதேவன் முன்னிலையில் மாணவா் சங்க பொறுப்பாளா்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

கோவை டெக்மஹிந்திரா மென்பொருள் நிறுவன மூத்த மேலாளாா் ச.சிவகுமாா், அணுகுமுறை, தன்னம்பிக்கை, சொல்வன்மை, திட்டமிடல் மற்றும் செயல்திறன் ஆகிவற்றின் முக்கியத்துவம் குறித்து மாணவா்களிடம் விளக்கிப் பேசினாா்.

இதைத்தொடா்ந்து முதலாமாண்டு மாணவா்களுக்கான புத்தாக்கப் பயிற்சிகள் தொடங்கின. இப்பயிற்சி பல்வேறு பாடத்திட்டங்களில் சிறந்து விளங்கும் பயிற்சியாளா்களைக் கொண்டு இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT