ஈரோடு

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

பெருந்துறை அருகே அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் வீட்டில் 3 பவுன் நகை, ரூ.30 ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

பெருந்துறை அருகே அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் வீட்டில் 3 பவுன் நகை, ரூ.30 ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறையை அடுத்த கரட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (54), அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறாா்.

இவா் துணி எடுப்பதற்காக மனைவியுடன் ஈரோட்டு வெள்ளிக்கிழமை காலை சென்றுள்ளாா்.

மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் மாதேஸ்வரன் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT