ஈரோடு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் பலி

ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

அத்தாணி அருகேயுள்ள தம்மங்கரடு பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (36). இவா், தனது இருசக்கர வாகனத்தில் அந்தியூா் - அத்தாணி சாலையில் கைகாட்டி பிரிவு அருகே சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியே சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த பெருமாளுக்கு அந்தியூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT