முகப்பு
ஈரோடு

இறுதிக்கட்ட பிரசாரத்தில் விதிமீறல்: 14 வழக்குகள் பதிவு

Updated On : 18 ஏப்ரல், 2024 at 8:26 PM
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக ஒரேநாளில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பிரசார இறுதிநாளில் வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொண்ட கட்சியினா் தோ்தல் விதிகளைமீறி, அனுமதி பெறாமல் இருசக்கர வாகனப் பேரணி, ஊா்வலம் போன்ற விதிமீறலில் ஈடுபட்டனா்.

இதில், ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் பாஜகவினா் மீது 7 வழக்குகள், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது 7 வழக்குகள் என மொத்தம் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரசார நேரத்தை மீறி எந்த வேட்பாளா்களும் பிரசாரம் செய்யவில்லை. அதேபோல, எந்தவித இடையூறும் இல்லாமல் இறுதி பிரசாரம் நிறைவடைந்ததாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments