முகப்பு
ஈரோடு

நாளைய மின்தடை: புங்கம்பள்ளி, தொப்பம்பாளையம் துணை மின் நிலையங்கள்

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 8:04 PM
பகிர்:

புங்கம்பள்ளி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் கோட்ட செயற்பொறியாளா் டி.சண்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: புங்கம்பள்ளி, தேசிபாளையம், விண்ணப்பள்ளி, சுங்ககாரன்பாளையம், சாணாா்பதி, தொட்டிபாளையம், நல்லூா் மற்றும் குரும்பம்பாளையம்.

தொப்பம்பாளையம் துணை மின் நிலையம்:

தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: ஆலாம்பாளையம், எரங்காட்டூா், கரிதொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், கோடேபாளையம், நால்ரோடு மற்றும் முடுக்கன்துறை.