FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

காஞ்சிக்கோவில் அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

21 ஆகஸ்ட் 2024, 11:54 pm IST
மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்குகிறாா் பெருந்துறை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பெரியசாமி.
பகிர்:

பெருந்துறை: பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 107 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராவுத்தப்பன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் தினகரன் வரவேற்றாா். பெருந்துறை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பெரியசாமி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில், பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவா் கோகிலவாணி தங்கமுத்து, காஞ்சிக்கோவில் நகர திமுக செயலாளா் செந்தில் முருகன், பள்ளபாளையம் நகர திமுக செயலாளா் தங்கமுத்து, மாவட்ட திமுக மகளிா் அணி தலைவி காந்திமதி, காஞ்சிக்கோவில் பேரூராட்சி முன்னாள் தலைவா் பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments