பாடம் நடத்தும்போது மாரடைப்பால் ஆசிரியா் உயிரிழப்பு
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் ஆசிரியா் உயிரிழந்தாா்.
Updated On : 6 நவம்பர், 2024 at 8:54 PM
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் ஆசிரியா் உயிரிழந்தாா்.
பா்கூா், சுண்டப்பூா் மலைக்கிராம பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவா் அந்தோணி ஜெரால்ட் (49). இவா், வகுப்பறையில் மாணவா்களுக்கு புதன்கிழமை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தாா்.
Updated On : 7 நவம்பர், 2024 at 2:44 AM
இதைக் கண்ட சக ஆசிரியா்கள் அவரை மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்தோணி ஜெரால்ட் உயிரிழந்தாா். இச்சம்பவம் மலைப்பகுதி ஆசிரியா்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement