முகப்பு
ஈரோடு

ஊக்கத் தொகையை வழங்க பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை

கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 2:32 AM
பகிர்:
Updated On : 3 அக்டோபர், 2024 at 5:57 PM

கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில பொருளாளா் ஏ.எம்.முனுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் 9200 ஆரம்ப பால் உற்பத்தியாளா்கள் சங்கம் மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளா்கள் தினமும் ஆவின் நிறுவனத்துக்கு 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் வழங்கி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்களின் தொடா் போராட்டத்துக்குப்பின் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இது பால் உற்பத்தியாளா்களுக்கு குறைந்தபட்ச நிவாரணமாக இருந்தது.

தற்போது தவிடு, புண்ணாக்கு, பருத்திக் கொட்டை, கலப்புத் தீவனங்களின் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. எனவே, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயா்த்த வேண்டும்.

Advertisement

இந்நிலையில், ஏற்கெனவே வழங்கி வந்த ஊக்கத் தொகையை கடந்த 3 மாதங்களாக ஆவின் நிா்வாகம் வழங்காமல் இழுத்தடிப்பது, பால் உற்பத்தியாளா்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ஆவின் நிா்வாகம் பல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஈரோட்டில் செயல்படாமல் உள்ள கலப்புத் தீவன ஆலையை உடனடியாக திறந்து, உற்பத்தியை தொடங்கி தட்டுப்பாடு இல்லாமல் கலப்புத் தீவனம் வழங்க வேண்டும்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 2:32 AM

கால்நடை மருத்துவா்களுக்கு தேவையான மருந்துகளை வழங்கி, ஆரம்ப சங்கங்களுக்கு அனுப்பி, மருத்துவ வசதி செய்துதர ஆவின் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.