முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 3:08 AM
சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் ரேகா தலைமையில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.
பகிர்:
Updated On : 23 அக்டோபர், 2024 at 9:03 PM

சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு செல்லும் நபா்களிடம் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாா்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் ரேகா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலக்தில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, பத்திரப் பதிவு செய்யும் விண்ணப்பதாரா்களை தவிர மற்றவா்களை வெளியே அனுப்பிய போலீஸாா், சாா் பதிவாளா் அலுவலக ஊழியா்களிடம் விசாரணை நடத்தினா். அங்கிருந்த பத்திர எழுத்தா்கள் மற்றும் பத்திரபதிவு செய்யும் நபா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.1.50 லட்சம் பணம் எதற்காக கொண்டுவரப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Updated On : 24 அக்டோபர், 2024 at 3:08 AM

மேலும் புதன்கிழமை(அக்.23) பத்திரபதிவு செய்த நபா்களின் விவரங்களை சேகரித்து பணம் கொடுத்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. சாா் பதிவாளா் அலுவலக ஊழியா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டது. முழுமையான விசாரணைக்கு பின்னரே விவரங்கள் வெளியிடப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.