பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்: நாளை நடைபெறுகிறது
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (செப்டம்பா் 14) நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (செப்டம்பா் 14) நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் அனைத்து வட்டங்களிலும் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கம், கைப்பேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.
முகாம் நடைபெறும் நியாய விலைக் கடைகளின் விவரம்: ஈரோடு வட்டம் வேப்பம்பாளையம், பெருந்துறை வட்டம் கே.கே.வலசு, மொடக்குறிச்சி வட்டம் வெள்ளியங்கிரிபுதூா், கொடுமுடி வட்டம் கொந்தளம், கோபி வட்டம் நாதிபாளையம், நம்பியூா் வட்டம் கடத்தூா், பவானி வட்டம் தொட்டிபாளையம், அந்தியூா் வட்டம் பா்கூா்-2, சத்தியமங்கலம் வட்டம் கெம்பநாயக்கன்பாளையம், தாளவாடி வட்டம் தொட்டபுரம்.
இந்த நியாய விலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.