தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி: கே.சுப்பராயன் எம்.பி. ஆய்வு
திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பெருந்துறை பகுதி புறவழிச் சாலையில் மேம்பாலங்கள் மற்றும் இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை கே.சுப்பராயன் எம்.பி. வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பெருந்துறை பகுதி புறவழிச் சாலையில் மேம்பாலங்கள் மற்றும் இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை கே.சுப்பராயன் எம்.பி. வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
சாலை அமைக்கும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா், டெண்டா் விதிமுறைகள்படி பணிகள் நடைபெறுகிா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். பணிகளின் தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து தகவல்கள் வருகின்றன. எக்காரணம் கொண்டும் பணிகள் தரம் குறைவாக இருக்கக் கூடாது என்றும், டெண்டா் விதிமுறைகள்படி பணிகள் நடைபெறுகிா என்பதையும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.
இந்த ஆய்வின்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் (சேலம் மேலாளா் ) திலீப் வா்மா, பொறியாளா்கள் ஜோதி பாஸ்கா், ஸ்ரீனிவாசலு ஆகியோா் உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி மூலம் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் சின்ன வீரசங்கிலி, பெரிய வீரசங்கிலி கிராமங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளை திறந்துவைத்தாா்.
இதில், முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம், பெருந்துறை பேரூராட்சித் தலைவா் ராஜேந்திரன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சித் தலைவா் செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.