பேரணியை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் ராஜேஸ்வரி. 
ஈரோடு

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

அந்தியூரில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

அந்தியூரில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் செயல்படுத்தப்பட்ட 25-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்பேரணியை ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் ராஜேஸ்வரி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் உமாசங்கா், அந்தியூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், அமுதா, சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அந்தியூா் அரசு ஆண்கள் பள்ளியில் தொடங்கிய பேரணி, பா்கூா் சாலை வழியாக பத்ரகாளியம்மன் கோயிலில் முடிவடைந்தது.

இதில், அந்தியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு கலைக் கல்லூரி, ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவியா் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று சாலைப் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனா். இதில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் கஸ்தூரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT