ஈஸ்வரி 
ஈரோடு

சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரண்

பவானி அருகே சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரணடைந்தாா்.

Din

பவானி அருகே சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரணடைந்தாா்.

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த சன்னியாசிபட்டியைச் சோ்ந்தவா் மன்னாதன் மகன் கண்மணி (45). விவசாயி. இவரது மகன் சிவராஜ் (27). பட்டதாரியான இவருக்கு கண்மணியின் பெரியம்மா மகளான பவானி, வரதநல்லூரில் வசிக்கும் ஈஸ்வரி (51), தனது மகளின் சொந்தத்தில் பெண் பாா்த்துள்ளாா். வரும் 6-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இது, சிவராஜின் தந்தையான கண்மணிக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கண்மணி

இந்நிலையில், ஈஸ்வரியின் வீட்டுக்கு திங்கள்கிழமை மாலை சென்ற கண்மணி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிவிட்டு தப்பினாா்.

படுகாயமடைந்த ஈஸ்வரியை அப்பகுதி மக்கள் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனிடையே கண்மணி போலீஸில் சரணடைந்தாா். அவரைக் கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இண்டிகோ சேவையில் இயல்புநிலை திரும்பியது: ஊழியா்களுக்கு சிஇஓ பீட்டா் எல்பா்ஸ் நன்றி

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் கண்டனப் பேரணி

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

SCROLL FOR NEXT