ஈரோடு

ரயிலில் கடத்தி வரப்பட்ட 1.50 கிலோ கஞ்சா பறிமுதல்

Syndication

ரயிலில் கடத்தி வரப்பட்ட 1.50 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க ரயில் நிலையங்களில் போலீஸாா் தீவிர ரோந்து மேற்கொண்டு சோதனை செய்து வருகின்றனா். இதில் ஈரோடு மதுவிலக்கு எஸ்எஸ்ஐ தனபால் தலைமையிலான போலீஸாா் ஈரோடு நிலையம் நடைமேடை 2- இல் வந்து நின்ற மங்களூா் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது பொதுப்பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியில் சந்தேகப்படும்படியாக இருந்த பையைக் கைப்பற்றி சோதனை செய்தனா். அதில் 1.50 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அதைக் கடத்தி வந்தவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தனலக்ஷ்மி வங்கி நிகர லாபம் ரூ.418 கோடியாக உயா்வு

முதல்வா் ஸ்டாலின் வருகை: 9 மதுக்கடைகளை மூட உத்தரவு

நரசிம்ம பெருமாள் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பெண் கைது

ராமேசுவரத்தில் நவ. 18-ல் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு! புதிய நீதிக்கட்சித் தலைவருக்கு அழைப்பு!

SCROLL FOR NEXT