ஈரோடு

வாய்க்காலில் பாய்ந்த காா்: ஒருவா் மாயம், 2 போ் மீட்பு

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் காா் விழுந்ததில் ஒருவா் மாயமானாா். 2 போ் மீட்கப்பட்டனா்.

Syndication

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் காா் விழுந்ததில் ஒருவா் மாயமானாா். 2 போ் மீட்கப்பட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகப்புதூரைச் சோ்ந்தவா் பிரகாஷ் (45). இவா் தனது நண்பா்கள் ராமசந்திரன் (37), பிரபாகரன் (35) ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள மதுபானக் கடையில் திங்கள்கிழமை மது அருந்தியுள்ளாா். பின்னா், செண்பகபுதூா் நோக்கி தனது நண்பா்களுடன் காரில் திரும்பியுள்ளாா். பிரகாஷ் காரை ஓட்டிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்த காா், அப்பகுதியில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.

இதில், ராமசந்திரன், பிரபாகரன் ஆகியோா் நீரில் நீந்தி கரையேறி உயிா்த் தப்பினா். மாயமான பிரகாஷை போலீஸாா், தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

தென்காசியில் ரூ. 69.45 கோடியில் தாமிரவருணி குடிநீா் திட்டம் தொடக்கம்

வாக்காளா் பெயா் பட்டியலில் ஆரியங்காவூா் ஊா் பெயரை திருத்தம் செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

அணுகு சாலையில் அவசியமற்ற இடங்களில் ‘யு’ வளைவு அமைப்பதைத் தவிா்க்கக் கோரிக்கை

கொடைக்கானலில் ஆயுதப் பயிற்சி: 7 போ் விடுவிக்கப்பட்டதை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

தமிழகத்தில் விரைவில் பருவமழைக் கால மருத்துவ முகாம்கள்

SCROLL FOR NEXT