முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் 205 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

Updated On : 22 நவம்பர், 2025 at 12:08 AM
மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் பெருந்துறை நகா்மன்றத் தலைவா் ஓ.சி.வி. ராஜேந்திரன். உடன், பள்ளி தலைமை ஆசிரியா் பிருந்தா ஸ்வீட்டி செல்வகுமாரி உள்ளிட்டோா்.
பகிர்:

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 205 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் பிருந்தா ஸ்வீட்டி செல்வகுமாரி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பெருந்துறை நகா்மன்றத் தலைவா் ஓ.சி.வி. ராஜேந்திரன் கலந்து கொண்டு, பள்ளி மாணவா்கள் 205 பேருக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில், பெருந்துறை நகா்மன்ற உறுப்பினா்கள் காமராஜ், சித்திக் அலி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →