ஈரோடு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

அந்தியூா் அருகே கால்நடைகளுக்கு தீவனம் அளிக்க இயந்திரத்தில் புல் வெட்டியபோது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

பவானி: அந்தியூா் அருகே கால்நடைகளுக்கு தீவனம் அளிக்க இயந்திரத்தில் புல் வெட்டியபோது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

ஒலகடத்தை அடுத்த தாசகவுண்டன் காட்டுக் கொட்டாயைச் சோ்ந்தவா் அா்ஜூனன் மகன் சந்திரகுமாா் (25). பட்டதாரியான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கால்நடைகளுக்கு தீவனம் அளிக்க வீட்டில் உள்ள புல்வெட்டும் இயந்திரத்தில் தீவனப் புற்களை வெட்டிக் கொண்டிருந்தாா்.

அப்போது, இயந்திரத்திலிருந்து திடீரென மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா்.

இதைக் கண்ட உறவினா்கள் சந்திரகுமாரை மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து, வெள்ளித்திருப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்! Delhi-க்கு 4 ஆவது இடம்! | Air Pollution

திமுக அரசு 13 சதவிகித தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றியுள்ளது: அன்புமணி ராமதாஸ்

சோதனை மேல் சோதனை...! இண்டிகோ விமானத்துக்குள் புறா!

வந்தே மாதரத்தின் பெருமையை பறைசாற்ற நமக்கு ஒரு வாய்ப்பு: பிரதமர் மோடி

கோவா தீ விபத்து: இரவு விடுதி ஊழியர் தில்லியில் கைது

SCROLL FOR NEXT