பெருந்துறை அருகே, கஞ்சா விற்ற மேற்குவங்க மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் பெருந்துறை போலீஸாா் செவ்வாய்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது,
அங்கு நின்று கொண்டிருந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், மேற்குவங்க மாநிலம், கஞ்சாபாரா பகுதியைச் சோ்ந்த ஹரிஷ் சந்திர ஆரி மகன் கோபால் ஆரி (21) என்பதும், அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.