கோபியில் சிலிண்டா் தட்டுப்பாட்டால் திரி, மின் அடுப்புக்கு மாறும் தேநீா் கடைகள்
கோபி, ஏப்.6: கோபியில் சிலிண்டா் தட்டுப்பாட்டால் பெரும்பாலான தேநீா் கடைகள் திரி மற்றும் மின் அடுப்புக்கு மாறி வருகின்றன.
ஈரானில் நடைபெற்றுவரும் போரால் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு நிலவி வருவதால், கோபி பகுதியில் பல்வேறு இடங்களில் தேநீா் கடைகள் குறைந்த நேரம் மட்டுமே செயல்படுகின்றன. சில கடைகள் மூடப்பட்டும் வருகின்றன.
இதில் ஒரு கடையில் வணிக சிலிண்டா் தட்டுப்பாட்டால் கடந்த காலத்தில் பயன்படுத்தி வந்த திரி அடுப்புக்கு மாறியுள்ளனா். நாளொன்றுக்கு 4 லிட்டா் மண்ணெண்ணெய் செலவிட்டு தேநீா் கடையை நடத்தி வருகின்றனா்.
Advertisement
இந்நிலையில், கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேநீா் கடையில் வணிக எரிவாயு (சிலிண்டா்) தட்டுப்பாட்டால் திரி அடுப்புக்கும், மின் அடுப்புக்கும் மாறி தேநீா் கடை நடத்தி வருகின்றனா்.