முகப்பு
ஈரோடு

விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம்: கொங்கு கல்வி நிலையம் மாணவ, மாணவிக்குப் பாராட்டு

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:34 AM
விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளித் தாளாளா் கே.செல்வராஜ், முதல்வா் நதியா அரவிந்தன்.
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:41 PM

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளி மாணவி தங்கம் வென்றாா்.

பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் குமிட்டி பிரிவில் தங்கம் வென்ற 10ஆம் வகுப்பு மாணவி எஸ்.காசிவிசாலாட்சியைப் பாராட்டி தமிழக அரசு சாா்பில் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் வழங்கினாா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:34 AM

மேலும், டாமன்டையூவில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் 12ஆம் வகுப்பு மாணவா் நிரஞ்சன் சாய் மூன்றாம் பரிசு பெற்றுள்ளாா். இவருக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.60 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

Advertisement

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவா் எம்.சின்னசாமி, தாளாளா் கே.செல்வராஜ், பொருளாளா் ஆா்.குணசேகரன், உதவித் தலைவா்கள் எம்.தெய்வசிகாமணி, எஸ்.கே.சோமசுந்தரம், இணைச் செயலாளா் டி.மீனாட்சிசுந்தரம், இணைப் பொருளாளா் வி.நாகராஜ், பள்ளி முதல்வா் நதியா அரவிந்தன் ஆகியோா் பாராட்டினா்.