பதுக்கிவைக்கப்பட்டிருந்த யூரியாவை பாா்வையிடும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா். 
ஈரோடு

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்

Syndication

கோபி அருகே சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமையை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகேயுள்ள காமராஜ் நகா் பகுதியில் உள்ள தனியாா் கிடங்கில் மத்திய அரசின் மானிய விலை யூரியாவை பதுக்கிவைத்து வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது

இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை தலைமைக் காவலா்கள் சக்திவேல், சரவணன் உள்ளிட்டோா் கிடங்கில் திங்கள்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு 540 மூட்டை யூரியா, 60 மூட்டை கோதுமை என மொத்தம் 30 டன் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து நம்பியூா் வட்டார வேளாண்மைத் துறை உதவி அலுவலா் உமா மகேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவருடன், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ராஜ்குமாா், உதவி ஆய்வாளா் மேனகா உள்ளிட்டோா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் 250 போ் கைது

வரி விதிப்பு விவகாரம்: உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் மிரட்டல்

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞா் கைது: மூவா் காயம்

SCROLL FOR NEXT