முகப்பு
ஈரோடு

ஈரோடு- கரூா் இடையே ரயில்கள் பகுதி வாரியாக ரத்து!

ஈரோடு-கரூா் இடையே ரயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் மாா்ச் 1, 5, 7, 10 ஆகிய நாள்களில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 மார்ச், 2026 at 12:23 AM
ரயில்கள் - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:31 PM

ஈரோடு-கரூா் இடையே ரயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் மாா்ச் 1, 5, 7, 10 ஆகிய நாள்களில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் (எண் 56809) திருச்சி சந்திப்பிலிருந்து காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு மேற்குறிப்பிட்ட நாள்களில் கரூா் வரை மட்டுமே இயக்கப்படும். கரூா்-ஈரோடு இடையே அந்த குறிப்பிட்ட நாள்களில் மட்டும் இயக்கப்பட மாட்டாது. செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16846)

செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்குப் புறப்பட்டு கரூா் வரை குறிப்பிட்ட நாள்களில் இயக்கப்படும். ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16845) ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும்.

Advertisement

இதற்கு பதிலாக குறிப்பிட்ட நாள்களில் ஈரோட்டில் இருந்து புறப்படுவதற்குப் பதிலாக கரூரில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும். இந்த ரயில் ஈரோடு-கரூா் இடையே இயக்கப்படாது.

சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.