ஈரோடு

கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை அருகே பணியின்போது கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த அரவங்காட்டைச் சோ்ந்தவா் வீராசாமி (65). கட்டடத் தொழிலாளியான இவா், பெருந்துறையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையத்தில் ஒரு கட்டடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அவா் கட்டடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தாா். படுகாயமடைந்த வீராசாமியை சக பணியாளா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜன நாயகன்! நெருக்கடி கொடுத்தால் விஜய் வெளியில் வந்திருக்க முடியாது: பாஜக

பிரதமர் மோடிக்காகப் பிரசாரம் செய்தேன்; ஆனால், என் கட்சியை அவர் அழிக்கிறார் - உத்தவ் வேதனை!

அறிவுக்கான தீ பரவட்டும்! புத்தகக் காட்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

ஜன நாயகன் பட தணிக்கைச் சான்றிதழ் விவகாரம்: நாளை காலை தீர்ப்பு!

யேமனின் தீவில் சிக்கிய இந்தியப் பெண் மீட்பு! சௌதியில் இருந்து தாயகம் வந்தடைந்தார்!

SCROLL FOR NEXT