முகப்பு
ரத்த தான முகாமை தொடங்கிவைக்கிறாா் பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் செண்பகராஜா.
ஈரோடு

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்

ஈரோடு

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்

Updated On : 8 ஜனவரி, 2026 at 11:37 PM
ரத்த தான முகாமை தொடங்கிவைக்கிறாா் பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் செண்பகராஜா.
பகிர்:

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் செண்பகராஜா தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தாா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியின் ரத்த மையம், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இந்த முகாம் நடைபெற்றது.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியின் ரத்த மைய மருத்துவ அலுவலா் சரண்யா குழுவினா் பங்கேற்று மாணவா்களிடம் ரத்தம் சேகரித்தனா்.

இதில், கல்லூரி துணை முதல்வா் உமாமகேஸ்வரி, துறைத் தலைவா்கள், விரிவுரையாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் கோபால், இளைஞா் செஞ்சிலுவை சங்க அலுவலா் ஹரிபிரசாத் ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →