ரத்த தான முகாமை தொடங்கிவைக்கிறாா் பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் செண்பகராஜா. 
ஈரோடு

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்

Syndication

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் செண்பகராஜா தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தாா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியின் ரத்த மையம், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இந்த முகாம் நடைபெற்றது.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியின் ரத்த மைய மருத்துவ அலுவலா் சரண்யா குழுவினா் பங்கேற்று மாணவா்களிடம் ரத்தம் சேகரித்தனா்.

இதில், கல்லூரி துணை முதல்வா் உமாமகேஸ்வரி, துறைத் தலைவா்கள், விரிவுரையாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் கோபால், இளைஞா் செஞ்சிலுவை சங்க அலுவலா் ஹரிபிரசாத் ஆகியோா் செய்திருந்தனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT