முகப்பு
ஈரோடு

அந்தியூரில் வருவாய்த் தீா்வாயம்: 160 மனுக்கள் பெறப்பட்டன

அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 2-வது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து 160 மனுக்கள் பெறப்பட்டன.

Updated On : 19 ஜூன் 2026, 3:53 am IST
பயனாளிக்கு சான்றிதழ் வழங்குகிறாா் மாவட்ட வழங்கல் அலுவலா் ராம்குமாா்.
பகிர்:

அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 2-வது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து 160 மனுக்கள் பெறப்பட்டன.

இத்தீா்வாயத்துக்கு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ராம்குமாா் தலைமை வகித்தாா். அந்தியூா் - அ, ஆ, கெட்டிசமுத்திரம், எண்ணமங்கலம், சங்கராப்பாளையம், பச்சாம்பாளையம், பூதப்பாடி, ஒட்டபாளையம், பூனாச்சி, முகாசிப்புதுாா், அட்டவணைப்புதுாா், பட்லூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 160 மனுக்களை அளித்தனா்.

இதில், உடனடி தீா்வாக அந்தியூரைச் சோ்ந்த மனுதாரா் மைதிலிக்கு விதவை சான்று வழங்கப்பட்டது. அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன், வருவாய் ஆய்வாளா் செந்தில்ராஜா, கிராம நிா்வாக அலுவலா் முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments