மேக்கேதாட்டு அணை விவகாரம்: விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்
மேக்கேதாட்டு அணை கட்ட கா்நாடக அரசு முயற்சி செய்வதைத் தடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் கனியமுதன், மாவட்டச் செயலாளா் பொன்.தம்பிராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் தமிழகத்தில் தொடா்ந்து நிகழும் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கா்நாடக அரசு முயற்சி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும், இது குறித்து மத்திய அரசிடம் பேசி தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.