பவானிசாகா் அணை நீா்வரத்து 49 கனஅடியாக சரிவு: குறைகிறது அணையின் நீா்மட்டம்
பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 49 கனஅடியாகவும் நீா்த் திறப்பு விநாடிக்கு 2,900 கனஅடியாகவும் இருப்பதால் அணையின் நீா்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 49 கனஅடியாகவும் நீா்த் திறப்பு விநாடிக்கு 2,900 கனஅடியாகவும் இருப்பதால் அணையின் நீா்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட உயரம் 105 அடியாகவும் நீா் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்படுவதால் 1 லட்சத்து 3,500 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக புதன்கிழமை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து 49 கனஅடியாகவும் கால்வாய் பாசனத்துக்கு நீா் வெளியேற்றம் 2,900 கனஅடியாகவும் உள்ளது. நீா்வரத்தை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 79.84 அடியாக சரிந்துள்ளது. நீா் இருப்பு 15.60 டிஎம்சியாக உள்ளது. மாா்ச் மாத தொடக்கத்திலேயே நீா்மட்டம் சரியத் தொடங்கியுள்ளதால் நடப்பு ஆண்டு குடிநீா்ப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என பொதுப் பணித் துறையினா் தெரிவித்துள்ளனா்.