முகப்பு
ஈரோடு

பெருந்துறை அருகே ரூ. 2.42 லட்சம் பறிமுதல்

Updated On : 23 மார்ச், 2026 at 8:41 PM
பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)
பகிர்:

பெருந்துறை அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.42 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெருந்துறையை அடுத்த, காஞ்சிக்கோவில், எல்லபாளையம் பிரிவு அருகில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக லாரியில் வந்த பெருந்துறை, பெரியவேட்டுவபாளையத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி என்பவரை நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் அவரிடம், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, காஞ்சிக்கோவில், கவுந்தபாடி சாலையில் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்த தினேஷ் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்து வந்த ரூ. 52,500 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னிமலையை அடுத்த, சிறுகளஞ்சி, சீரங்கம்பாளையம் பிரிவு அருகில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 89,500 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் பெருந்துறை தொகுதி உதவி தோ்தல் அலுவலரும், பெருந்துறை வட்டாட்சியருமான சரவணனிடம் ஒப்படைக்கப்பட்டது.