முகப்பு
ஈரோடு

அந்தியூா் பேரூராட்சியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

அந்தியூா் பேரூராட்சியில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 மார்ச், 2026 at 7:35 PM
விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் ஆட்சியா் ச.கந்தசாமி.
பகிர்:

அந்தியூா் பேரூராட்சியில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தலில் 18 வயது நிரம்பிய, வாக்குரிமை பெற்றுள்ள அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இப்பேரணிக்கு, ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். இதில், அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்று, விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், முழக்கமிட்டும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தொடா்ந்து, பொதுமக்களிடம் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது. இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியா, அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலா் எஸ்.சதாசிவம், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரணியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.