முகப்பு
நீலகிரி

காவல் நிலையத்தில்  பூட்டை உடைத்து  வாகனம் திருட்டு

குன்னூர் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் ஓர் அறையின் பூட்டை உடைத்த மர்ம நபர் இரு சக்கர வாகனத்தைத் திருடிச் சென்றார்.   

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

குன்னூர் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் ஓர் அறையின் பூட்டை உடைத்த மர்ம நபர் இரு சக்கர வாகனத்தைத் திருடிச் சென்றார்.  
நீலகிரி மாவட்டம், குன்னூரில் அவ்வப்போது வாகன சோதனை நடைபெறுவது  வழக்கம். இதில் பறிமுதல்  செய்யப்படும் வாகனங்கள் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் ஓர் அறையில் வைக்கப்பட்டுள்ளன.       
இந்நிலையில், இந்தப் போக்குவரத்துக் காவல்  நிலைய அறையின் பூட்டை உடைத்த மர்ம நபர், அங்கிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றை எடுத்துச் சென்றார். அந்த அறையை எதேச்சையாகப் பார்த்த போக்குவரத்துக் காவலர்கள்,  இதுகுறித்து  போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் முரளியிடம் தகவல் தெரிவித்தனர்.  
இதுதொடர்பாக  குன்னூர், தூதூர்மட்டத்தைச் சேர்ந்த தியாகு என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.  காவல்  நிலையத்துக்குள்ளேயே திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →