போலீஸ் நண்பர்கள் பயிற்சி முகாம்
காவல் துறை நண்பர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் கூடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
காவல் துறை நண்பர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் கூடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியிலுள்ள காவல் துறை நண்பர்களை ஒருங்கிணைத்துப் பயிற்சி நடத்தப்பட்டது. இதில், காவல் துறையுடன் இணைந்து பணியாற்றுவது, போலீஸார் காவல் துறை நண்பர்களுடன் இணைந்து செயல்படுது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட எஸ்.பி.முரளி ரம்பா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சென்னையிலிருந்து வந்த பயிற்சியாளர்கள் ஸ்நேகா, செபாஸ்டியன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.