முகப்பு
நீலகிரி

கூடலூரில் மனைவி நல வேட்பு நாள்

கூடலூரில் மனைவிநல வேட்பு நாள் விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 6:47 AM
பகிர்:

கூடலூரில் மனைவிநல வேட்பு நாள் விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
  கூடலூர் மனவளக்கலை மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஐ.சிவராஜ் தலைமை வகித்தார். 
பேராசிரியர் சி.பாஸ்கரன்-வனிதா, துணைப் பேராசிரியர் சி.மணிகண்டன்-ஏ.சி.சுமதி, எஸ்.குமரேசன்-பி.சுகந்தி ஆகிய தம்பதிகள் சிறப்புத் தம்பதியர்களாகத் தேர்வு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். 
கனிமலர் பரிமாறப்பட்டது.துணைத் தலைவர் எம்.பாண்டியராஜ், பேராசிரியர் ஆர்.சந்திரகலா ஆகியோர் சிறப்புரையாற்றினர். எஸ்.சிவகாந்தன், துணைப் பேராசிரியர் பி.எஸ்.மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். செயலாளர் ஏ.பாக்கியநாதன் வரவேற்றார். நா.சண்முகவேல் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.