ரெப்கோ வங்கி சார்பில் வெள்ள நிவாரண உதவி
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் ரெப்கோ வங்கி சார்பில் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் ரெப்கோ வங்கி சார்பில் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
கடந்த மாதம் கேரள மாநிலத்தில் பெய்த கடும் மழையால் பல இடங்கள் பாதிக்கப்பட்டன. இதில் வயநாடு மாவட்டத்தின் மானந்தவாடி பகுதியில் கம்பமலை மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் செயல்படும் கேரள அரசுக்குச் சொந்தமான எஸ்டேட் சாலையும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதிக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
ரெப்கோ வங்கியின் இயக்குநர்கள் மகாலிங்கம், முனீஸ்வர் கணேசன் ஆகியோரின் பரிந்துரைப்படி, வங்கின் நிர்வாக இயக்குநர் இசபெல்லா, கம்பமலை எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி, பந்தலூர் ரெப்கோ வங்கி மேலாளர் பாலாஜி, கூடலூர் ரெப்கோ வங்கியின் உதவி மேலாளர் ஸ்வஸ்திக், பணியாளர்கள் சந்திரசேகர், பாலமுருகன் ஆகியோருடன் ரெப்கோ வங்கி டெலிகேட்ஸ் யூனியனின் தென்னிந்திய தலைவர் சு.ஆனந்தராஜ், துணைத் தலைவர் கு.கிருஷ்ணபாரதியார் ஆகியோர் சம்பந்தப்பட்ட எஸ்டேட்டுக்குச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்து, 120 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினர்.