நீலகிரி

குன்னூர் அருவங்காடு பகுதியில் "சிக்னலை' சீரமைக்கக் கோரிக்கை

குன்னூர் - உதகை நெடுஞ்சாலையில் உள்ள அருவங்காடு பகுதியில் "சிக்னலை' சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

DIN

குன்னூர் - உதகை நெடுஞ்சாலையில் உள்ள அருவங்காடு பகுதியில் "சிக்னலை' சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருவங்காடு பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை, 4 பள்ளிகள் உள்ளன. இப்பகுதியில் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகபிரியா உத்தரவின்பேரில் இப்பகுதியில் "சிக்னல்' அமைக்கப்பட்டது. அதேபோல, "ஜீப்ரா கிராசிங்', எச்சரிக்கை பலகைகள், மக்கள் சாலையை கடந்து செல்லும் இடத்தில் வெள்ளை நிற பெயின்ட் அடிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் வரும்போது, இங்கு மீண்டும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, இப்பகுதியில் உள்ள "சிக்னலை' சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும் வகையில் "ஜீப்ரா கிராசிங்', எச்சரிக்கை பலகைகள், மக்கள் சாலையை கடக்கும் இடத்தில் வெள்ளை நிற பெயின்ட் அடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT