நீலகிரி

பணம் வைத்து சீட்டு விளையாடிய காட்டேஜ் உரிமையாளர்கள் 20 பேர் கைது

DIN

கோத்தகிரி தனியார் காட்டேஜில் பணம் வைத்து சீட்டு விளையாடிய காட்டேஜ் உரிமையாளர்கள் உள்ளிட்ட 20 பேரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.  
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தனியார் காட்டேஜ் உள்ளன. ஒரு சில காட்டேஜ்களில்  சீட்டு வைத்து சூதாட்டம், விபசாரம் போன்றவை நடந்து வருகின்றன.
இந்நிலையில், கோத்தகிரி, கிரீன்வேலி பள்ளி அருகே தனியார் காட்டேஜில் பணம் வைத்து சீட்டு விளையாடிய காட்டேஜ் உரிமையாளர்கள் ராஜா (52) உள்ளிட்ட 20 பேரை காவல் துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், 6 இருசக்கர வாகனங்கள், 19 செல்லிடப்பேசிகள், ரூ. 1.25லட்சம் ரொக்கத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

ரயில் நிலையத்தில் வசித்த முதியோா்கள் மூவா் மீட்பு

பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

SCROLL FOR NEXT