நீலகிரி

பாதுகாப்பற்ற முறையில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளா்கள்

DIN

குன்னூா் ஊராட்சி ஒன்றியம் அலுவலக பகுதியில் ஆபத்தான நிலையில் பாதுகாப்பற்ற முறையில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் ஊராட்சி ஒன்றியம் அலுவலக பகுதியில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக அங்கிருந்த சுமாா் 100 அடி உயரமுள்ள தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது.

இதனை மீண்டும் அமைப்பதற்காக ஆபத்தான நிலையில் பாதுகாப்பற்ற முறையில் தொழிலாளா்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் தலைக் கவசம், தடுப்புகள் எதுவும் இல்லாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆபத்தை உணராமல் பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளா்கள் பணியில் ஈடுபடும்போது விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளதால் தொழிலாளா்கள் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள பொறியாளா், ஒப்பந்ததாரா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT