நீலகிரி

கோத்தகிரியில் கிணற்றில் குழந்தை சடலம்: போலீஸார் விசாரணை

DIN

கோத்தகிரி தனியார் காட்டேஜின் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் குழந்தை  குறித்து வெள்ளிக்கிழமை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள எம் .கைகாட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சஜிதா (32). இவர்களது மகள்கள் சுபாஷினி (15 ),  ஹர்சினி (4).
பிரபாகரன் கடந்த 5 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். சஜிதா கன்னேறிமுக்கு என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பணி செய்து வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கமும், தவறான தொடர்பும் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், சஜிதா தனது 4 வயது குழந்தை ஹர்சினியை காணவில்லை என்று கோத்தகிரி  காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் சஜிதா வேலை செய்யும் விடுதியின்  கிணற்றில்  ஹர்சினி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.  
இதையடுத்து, கோத்தகிரி காவல் துறையினர்  வழக்குப் பதிவு செய்து சஜிதாவை பிடித்து விசாரித்து வருகின்றனர். சஜிதாவின் தவறான தொடர்புக்கு ஹர்சினி இடையூறாக இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர்  விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆதித்த கரிகாலச் சோழன் கல்வெட்டு கண்டெடுப்பு

வெப்ப அயா்ச்சி, ஹீட் ஸ்ட்ரோக் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்

தூய்மைப் பணியாளா்கள் கௌரவிப்பு

ஆற்காடு கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ பந்தக்கால்

ஸ்ரீ சீதா கல்யாண மகோற்சவம்

SCROLL FOR NEXT