நீலகிரி

வட்டாட்சியர் பேச்சுவார்த்தை: முடிவுக்கு வந்தது பொதுமக்களின் உண்ணாவிரதம்

DIN

நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள எருமாடு பகுதியில் நிலப்பட்டா வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டம், வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து வியாழக்கிழமை இரவு கைவிடப்பட்டது. எருமாடு பகுதியிலுள்ள வெட்டுவாடி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நீண்டகாலமாக தாங்கள் குடியிருந்து விவசாயம் செய்துவரும் நிலத்துக்கு பட்டா வழங்க வலியுறுத்தி, கடந்த திங்கள்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
 பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் வியாழக்கிழமை இரவு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமரசமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT