கூடலூர், பந்தலூர் பகுதியில் இரண்டாவது நாளாக தொடர் மழை
நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் இரண்டாவது நாளாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் இரண்டாவது நாளாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஒடுகிறது. பொன்னாணி ஆற்றங்கரையில் தடுப்புச் சுவர் உடைந்துள்ளதால் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலூர் - ஒவேலி சாலையில் மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்துத் தடை ஏற்பட்டது. மின் கம்பிகள் அறுந்து
விழுந்தால் அந்த பகுதி இருளில் முழ்கியது.