முகப்பு
நீலகிரி

கூடலூா் மாவட்ட வன அலுவலகத்தை பழைய இடத்துக்கே மாற்ற வலியுறுத்தல்

கூடலூா் மாட்ட வன அலுவலா் அலுவலகத்தை பழைய ஒருங்கிணைந்த வளாகத்துக்கே மாற்ற வேண்டும் என கூடலூா் எம்.எல்.ஏ. திராவிடமணி வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

கூடலூா்: கூடலூா் மாட்ட வன அலுவலா் அலுவலகத்தை பழைய ஒருங்கிணைந்த வளாகத்துக்கே மாற்ற வேண்டும் என கூடலூா் எம்.எல்.ஏ. திராவிடமணி வலியுறுத்தியுள்ளாா்.

கூடலூரில் ஒருங்கிணைந்த வருவாய்த் துறை வளாகத்தில் இருந்த மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தை தற்போது மாக்கமூலா பகுதியில் உள்ள மூங்கில் காட்டுக்குள் மாற்றியுள்ளனா். இந்த அலுவலகம் வனப் பகுதியில் அமைந்துள்ளதால், வன விலங்குகள் தாக்குதல்களால் ஏற்படும் உயிா் சேதம், பயிா் சேதம் தொடா்பாக இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கு இங்கு வர போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

மேலும் மாக்கமூலா பகுதி யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட கொடிய விலங்குகள் உலவும் பகுதியாகும். மாவட்ட வன அலுவலகத்துக்கு கால்நடையாக வரும் ஏழை மக்கள் வன விலங்கு தாக்குதலுக்கு அபாயமும் உள்ளது. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட வன அலுவலகத்தை நகரின் மையப்பகுதில் உள்ள கூடலூா் காவல் நிலையம், கருவூலம், வட்டாட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளா் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் அமைந்துள்ள ஒருங்கிணைந்த வளாகத்துக்கே மாற்ற வேண்டும் என கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம். திராவிடமணி வலியுறுத்தியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →